பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், மகா உற்சவ (ஆண்டு உற்சவம்) விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், மகா உற்சவ விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி காலை கோமாதா பூஜை, 108 திவ்ய கலசங்களில், 108 திவ்ய தேச எம்பெருமான்கள் ஆவாஹனம் அருளச் செயல் மற்றும் பாராயணங்கள் ஆரம்பம், நடந்தது. பின்னர் நடந்த கும்ப மகா சம்பரோக்ஷணம், மற்றும் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.