பதிவு செய்த நாள்
18
டிச
2015
11:12
சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலையில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் புறப்பாடாகி, பிரகார வலம் வந்து கொடிமர சன்னிதியில் எழுந்தருளினர். பன்னிரு திருமுறை வழிபாடு செய்து, காலை, 9:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அப்போது, பக்தர்கள் தில்லைக் கூத்தானே, தில்லை அம்பலத்தானே என, கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர்.ஆருத்ரா தரிசனம் வரை, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.