Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூரில் தட்சிணாமூர்த்திக்கு ... மார்கண்டேயன் மடத்தில் மார்கழி மாத பஜனை ஊர்வலம் மார்கண்டேயன் மடத்தில் மார்கழி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர், அவிநாசி கோவில்களில் தனுர் மாத பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பூர், அவிநாசி கோவில்களில் தனுர் மாத பூஜை

பதிவு செய்த நாள்

18 டிச
2015
12:12

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி, பல்லடம் வட்டாரத்தில் உள்ள கோவில்களில், தனுர் மாத சிறப்பு பூஜை, பஜனை நேற்று துவங்கியது. தனுர் மாதம் எனப்படும் மார்கழி, தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் உகந்த மாதம். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என, பல்வேறு விசேஷங்கள் நடைபெறும் மாதம். இம்மாதத்தில், அதிகாலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கிராமங்களில், வீட்டுவாசலில் பெண்கள் மாக்கோலமிட்டு, பூசணிப்பூ உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். வீதிகளில் பஜனை குழுவினர், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை போற்றுவர். விநாயகர் கோவில்களில், நீரால் அபிஷேகம் செய்து, பெண்கள் பலரும் வழிபட்டு வருவர்.

திருப்பூர் பகுதி கோவில்களில், சிறப்பு பூஜை நேற்று துவங்கியது. ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிவில், நேற்று அதிகாலை, 3:30க்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்பட்டது. இதேபோல், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிவில், ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டது. ராயபுரம் ஸ்ரீபூமி நீளா தேவி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிவில், நேற்று அதிகாலை, 4:00க்கு நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜை துவங்கியது. கோவில் வளாகத்தில், மாக்கோலமிட்டு, பூக்கள் வைக்கப்பட்டன. அருள்நெறி வார வழிபாட்டு மன்றம் சார்பில், அதிகாலை, 5:30க்கு, குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு, வீதிகள் வழியாக பஜனை ஊர்வலம் நடந்தது. நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நேற்று, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. விநாயகர் கோவில்களில், பெண்கள், குழந்தைகள், அரசு மரத்தடி விநாயகருக்கு நீரூற்றி வழிபட்டனர். இம்மாதம் முழுவதும், இத்தகைய வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

சிவனடியார் வீதி உலா: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத வழிபாடு நேற்று துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை வழிபாடு நடைபெற்றது. அனைத்து சன்னதி களிலும் உள்ள மூலவ மூர்த்தி களுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில் பூஜை குழு சிவனடியார்கள் மற்றும் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளை உறுப்பினர்கள், நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்று, திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரம் பாராயணம் செய்தனர். அதன்பின், கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில், விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவபெருமானுக்கு, 16 வகை அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. மடாலய ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள், திரும்வெம்பாவை பாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar