Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் ... சபரிமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து தரிசனம்! சபரிமலையில் ஆறு மணி நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்!
எழுத்தின் அளவு:
மதுரை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்!

பதிவு செய்த நாள்

22 டிச
2015
10:12

மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக பெருமாள்  எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று மாலை மடப்பள்ளி பெரிய கதவு திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருளினார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 4.30 மணிக்கு மூலவர் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் முடிந்து புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் தந்தார். காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

அழகர்கோவில் - அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. உற்சவர் அலங்காரம் முடிந்து காலை 6.15 மணிக்கு புறப்பாடு நடந்தது. காலை 6.45 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளினார். பின் வாசல் எதிரில் உள்ள மண்டபத்தில் சயன அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 6.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

சோழவந்தான்: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தலைமை கணக்கர் வெங்கடேசன் செய்தனர். சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று ரகுராமபட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். சொர்க்கவாசல் திறப்பு முடிந்து சர்வஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar