Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை: வார்த்தைகளை ... கரூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் கரூர் கோவில்களில் சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெருமாள் கோவில்களில் களை கட்டிய ஏகாதசி
எழுத்தின் அளவு:
ஈரோடு பெருமாள் கோவில்களில் களை கட்டிய ஏகாதசி

பதிவு செய்த நாள்

22 டிச
2015
11:12

ஈரோடு: மாதங்களில் இறைவன் மார்கழியாக உள்ளார் என பகவத்கீதை சொல்கிறது. அதே சமயம் மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. இந்த தினத்தில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதன் வழியாகச் சென்று பெருமாளை தரிசித்தால் தீவினைகள் அகலும். கஷ்டங்களுக்கு நிவர்த்தி கிடைத்து, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், ஈரோடு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று முன்தினம் அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்காதர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக தேவி பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் டி.என்.பாளையம், நன்செய் புளியம்பட்டி கரிவரதராஜப் பெருமாள் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் மணிகூண்டு அருகேயுள்ளது பெரியகோவில் எனப்படும் வேணுகோபால் சுவாமி கோவில், அந்தியூர் பேட்டைபெருமாள், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள், வரதராஜ பெருமாள், பருவாச்சி புரசக்காட்டூர் கரியப்பெருமாள் கோவில்கள், புன்செய் புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், சென்னிமலை மேலப்பாளையத்தில் ஆதிநாராயண பெருமாள் கோவில், கே.ஜி.வலசு வடுகபாளையம் அணிரங்க பெருமாள் கோவில், வெள்ளோடு ஆலவாய் தண்ணீர் பந்தல் கிருஷ்ணப்பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல் திறப்பு வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar