Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்தனார் சிலை ஊர்வலம் பெருமாள் கோவிலில் இலவச திருப்பாவை பயிற்சி பெருமாள் கோவிலில் இலவச திருப்பாவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலி மண்டல பூஜை விழா; திரண்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலி மண்டல பூஜை விழா; திரண்ட பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

28 டிச
2015
12:12

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள்  நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோவிலில்  மண்டல பூஜை விழாவையொட்டி,  காலை 4:00  மணிக்கு திருமதுர பூஜை, 4:15 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு அபிேஷகம், 6:00 மணிக்கு மஞ்சள்  அம்மனுக்கு பூஜையும் நடந்தது.  காலை, 10:30 மணிக்கு மண்டல பூஜை, மஞ்சள் அம்மனுக்கு தீபாராதனை, 11:15 மணிக்கு ஐயப்ப  சுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணி மகேஸ்வர பூஜை, 11:45 மணி அன்னதானம் உள்ளிட்ட பூஜைகளும் இடம்பெற்றன.  ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின், மாலை, 6:00 மணிக்கு மண்டல பூஜை, 6:30 மணிக்கு பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, கோவை ரோடு,  உடுமலை ரோடு, தேர்நிலை வழி, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பஸ்ஸ்டாண்ட் வழியாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தன.  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  

கலை நிகழ்ச்சிகள்: ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பா சேவா  அணி சார்பில், ஐயப்ப தரிசன நாடகம், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின், மாலை 6:30  மணிக்கு வாணவேடிக்கையுடன் திருவீதி உலா  செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

108 சங்காபிேஷகம்: மடத்துக்குளம், கணியூர் ஐயப்ப சுவாமி கோவிலில், 108 சங்காபிேஷகம் இன்று நடக்கிறது. மடத்துக்குளம்,  ஜோத்தம்பட்டி, கணியூர் அருகே அரியநாச்சிபாளையம், ஜோதி நகரில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், நடந்து வரும் கும்பாபிேஷக  மூன்றாமாண்டு விழா மற்றும் மண்டல பூஜை விழா, ஒரு லட்சத்து எட்டு லட்சார்ச்சனை விழாவில், இன்று, 108 சங்காபிேஷக  நடக்கிறது. நேற்றுமுன்தினம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. காலை, 7:30 முதல்  லட்சார்ச்சனை ஆரம்பமானது. மாலையில், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை, 7:30  மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. பிற்பகல், 3:00 மணிக்கு, அமராவதி ஆற்றில் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. மாலை, 5:00  மணிக்கு, ஆற்றில் இருந்து, குதிரை வாகனத்தில், சுவாமி  ஊர்வலமாக, கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

விழா நிறைவு நாளான இன்று காலை, 8:45 மணிக்கு, ஒரு லட்சத்து எட்டு அர்ச்சனை நிறைவடைகிறது. காலை, 9:00 மணிக்கு, 108  சங்காபிேஷகம் நடக்கிறது; 10:30 மணிக்கு, 21 வகை மூலிகை திரவியங்களில் மூலவரான ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகமும், 11:30  மணிக்கு, சுவாமி ராஜ அலங்காரத்தில், வில் அம்புடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதியம், 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 12:30 மணிக்கு, ஐயப்ப பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar