கோவை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோவையின் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. கோவை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளோடு, துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.