Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவில் ... ஓசூர் கடலைக்காய் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பூஜைக்காக ஒரு கிராமமே தானம்: 16ம் நூற்றாண்டு கல்வெட்டில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2016
03:01

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், அம்மன் கோவில் பூஜை செலவுக்காக, ஒரு கிராமத்தையே தானமாக வழங்கப்பட்டுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

49 வரிகளில் ஆத்தூர் அருகே நத்தக்கரை கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் முன்பு,
பழங்கால எழுத்துகளுடன் இருந்த கற்பலகையை அப்பகுதிவாசிகள் வழிபாடு செய்து வந்தனர். கல்வெட்டு ஆய்வாளர்கள் வெங்கடேசன், மங்கை, வீரராகவன் ஆகியோர், இந்த கல்வெட்டு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 16ம் நூற்றாண்டில், ஆறகளூர் பெரியநாயகி அம்மன் கோவில் பூஜை செலவுக்காக, நத்தக்கரை கிராமத்தை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: நத்தக்கரை
கிராமத்தில், 85 செ.மீ., நீளம், 45 செ.மீ., அகலம் கொண்ட, 16ம் நூற்றாண்டில் (1585ம் ஆண்டு), 49
வரிகளில் தமிழில் எழுதப்பட்ட நிலதானம் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. விஜயநகர
பேரரசின் ஆட்சியில், நத்தக்கரை கிராமத்தில் கிடைக்கும் வரி இனங்கள் மூலம் கிடைக்கும்
தொகையை, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள, பெரியநாயகி அம்மன் பூஜை
செலவுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு, நத்தக்கரை கிராமத்தை தானமாக கொடுத்துள்ளனர்.
400 ஆண்டுகளாக...: இதில், கிராமத்தின், நான்கு புற எல்லைகளில் உள்ள ஊர்களின் பெயர்களும் உள்ளன. இந்த கல்வெட்டு குறிப்பிடும் தானத்துக்கு அழிவு செய்பவர்கள், சினை பசுவை கொன்ற பாவத்தை அனுபவிப்பார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பெயரும், 400 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar