பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
ராசிபுரம்: ராசிபுரம், அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, வரும், 9ம் தேதி நடக்கிறது. முன்னதாக, வரும், 7ம் தேதி மாலை, 6 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 8ம் தேதி காலை, 7 மணிக்கு ராமர்பாதம், நவமாருதி, திருமஞ்சன அபி?ஷகம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு விஷ்வக்ஷேன ஆராதனை, புண்யாகவாஜனம், வேத பாராயணம் மற்றும் ஆஞ்சநேய ஸகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியான, 9ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு சுதர்சன, அஷ்டலட்சுமி, குபேர, தன்வந்திரி, காயத்ரி, ஆஞ்சநேய மூலமந்திரம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடக்கிறது.