பதிவு செய்த நாள்
06
ஜன
2016
11:01
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவை யொட்டி சிறப்பு ஹோமம் நடந்து. மேல்மலைனூர் அ ங்காளம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவ,. 18ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை 7:00 மணிக்கு, மண்டலா பிஷேக நிறைவுக்கான சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் இந்து சமய அற நிøலையத்துறை உதவி ஆணையர் நாகபூஷினி, அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.