ஈரோடு: ஆர்ய வைஸ்ய சபா சார்பில், பெனுகொண்டா வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் நிஜ பாத தரிசன நிகழ்ச்சி, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள வாசவி மஹாலில் நடந்தது. காலை,7 மணிக்கு அக்ரஹாரம் பகுதிக்கு அம்மன் நிஜ பாதம் வந்தடைந்தது. 8 மணிக்கு வாசவி மஹால் வரை ஊர்வலம் சென்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு சுவாமியுடன் சென்றனர். பின்னர் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை, 6 மணிக்கு தீபாராதனை நடந்தது. அம்மனின் நிஜ பாதத்தை மலர் தூவி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் செய்து இருந்தனர்.