Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ... யானைகளுக்கு புத்துணர்வு முகாம் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீயிருக்க பயமேன்.. இன்னும் 13 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
நீயிருக்க பயமேன்.. இன்னும் 13 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

08 ஜன
2016
12:01

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் ஜன. 20ல் நடப்பதை ஒட்டி இந்த சிறப்பு பகுதி வெளியாகிறது. ராமன் இலங்கைக்கு செல்ல கடலைக் கடக்க முடிவு செய்தார். சமுத்திரராஜனை அழைத்தார். அவன் வரவில்லை. ராமேஸ்வரம் பக்கத்திலுள்ள திருப்புல்லாணி என்ற ஊரில் தர்ப்பையை விரித்து மூன்று நாட்களாக படுத்துக் கிடந்தார். சமுத்திரராஜன் கண்டு கொள்ளவே இல்லை. உடனே லட்சுமணனை அழைத்து, வில்லைக் கொடு. இந்தக் கடல் மீது பாணம் எய்து அதை வற்றச் செய்கிறேன். வானரங்கள் எல்லாம் நடந்தே போகட்டும் என்றார் கோபமாக. அப்போதும் சமுத்திரராஜன் பயப்படவில்லை. உடனே வில்லை எடுத்தார். அம்பைத் தொடுக்கும் வேளையில் சமுத்திரராஜன் வெளிப்பட்டான் அட்டகாசமான சிரிப்புடன். ராமா! என்னை அழித்து விடலாம் என்று நினைக்கிறாயா! உன் தம்பி இருக்கும் போது நான் ஏன் பயப்பட போகிறேன், என்றான்.

யார் இந்த லட்சுமணனைச் சொல்கிறாயா? என்றதும், இல்லை, இல்லை பரதனைச் சொல்கிறேன். அவன் உன் பாதுகைகளை (காலணி) பெற்றுச்  சென்றான் இல்லையா! அதை நந்தி கிராமத்தில் வைத்து தினமும் ஆயிரம் கலசங்களால் அபிஷேகம் செய்து வருகிறான். அந்த நீர், சரயு நதி வழியாக தினமும் என்னை வந்து சேர்கிறது. அந்த பாத தீர்த்தம் என் மீது பட்டு என் உடம்பு அதி பயங்கர பலம் பெற்றுள்ளது. நீ எய்யும் அம்பை தாங்கும் சக்தியை உன் பாத தீர்த்தமே எனக்கு தந்துள்ளது. இப்போது என்ன செய்வாய்? என்று எதிர்க்கேள்வி கேட்டான். யார் தன்னைக் கொல்ல வந்தானோ, அவனை அவனது திருவடியைக் கொண்டே மடக்கி விட்டான் சமுத்திரராஜன். ராமனின் திருவடிக்கு அவ்வளவு சக்தி மிக்கது. ராமேஸ்வரம் ராமனின் திருவடிபட்ட இடம். அவர் கால் வைத்த அக்னி தீர்த்தக் கடலில் நாம் நீராடும் போது நம் மனதில் பக்தி மட்டுமே இருக்க வேண்டும். துணிகளை கழற்றி கடலுக்குள் போடக்கூடாது. குப்பை கொட்டக் கூடாது. கும்பாபிஷேகத்திற்கு செல்பவர்கள் பக்தியோடு அக்னி தீர்த்தத்தில் கால் வையுங்கள்.  மகிமை மிக்க ராமனின் திருவடி பட்ட இடம் என்பதை உணர்ந்து பரவசத்துடன் நீராடுங்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar