வேடசந்தூர்:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தை சேர்ந்த 30 பேர், ஒவ்வொரு ஆண்டும் பழநிக்கு பாதயாத்திரையாக நடந்தே செல்கின்றனர். அவர்கள் நடந்து செல்வது மட்டுமின்றி, அலங்கரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்றையும், அதில் விநாயகர், மயில், முருகன் சிலைகளையும் வைத்து நடை பயணமாகவே இழுத்து செல்கின்றனர். இவர்கள் வாகனத்தை காணும் பொது மக்கள், அருகில் சென்று வணங்கி செல்கின்றனர். இக்குழுவினருக்கு பழனிச்சாமி என்பவர் குருசாமியாக இருந்து பக்தர்களை அழைத்து செல்கின்றார்.