Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவலூர் கோவிலில் லட்சார்ச்சனை விழா வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில் 108 பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பமரத்தில் விழுதுகள்: ஆச்சரியத்தில் வணங்கும் பொதுமக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2011
11:08

பள்ளிப்பட்டு : வேப்பமரத்தில் சில மாதங்களுக்கு முன், விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றியுள்ளதால், அந்த அதிசய வேப்பமரத்தை, அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவராகபுரம் கிராமம் அருகே, வயல்வெளியில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனருகே அமைந்துள்ள, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தில், நடுப்பகுதியில் இருந்து விழுதுகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த அதிசய வேப்பமரத்தை, தினமும் ஏராளமான மக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர். இது குறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த சிவா கூறும் போது, ""கிராமத்தின் அருகே உள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் மூன்றாவது வாரம், ஜாத்திரை திருவிழா நடைபெறும். மற்ற நாட்களில் இங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. கோவில் அருகே உள்ள இந்த வேப்பமரம், கடந்த ஆண்டு காய்ந்து போனது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், வேப்பமரத்தின் நடுப்பகுதியில் இருந்து விழுதுகள் வளர்ந்து வருவதாக, அருகே விவசாய நிலத்தை சேர்ந்தவர்கள் பார்த்து, மற்றவர்களுக்கு கூறினர். மேலும், எப்போதும் ஒரு நல்லப்பாம்பு மரத்தின் கிளையில் தென்படுவதாக கூறுகின்றனர். இந்த அதிசய மரத்தில், அம்மன் சக்தி இருப்பதாக, கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே இந்த கோவிலை புதுப்பித்து, திருடுபோன அம்மன் சிலைக்கு பதில், புதிதாக சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் விரைவில் நடத்த உள்ளோம், எனக் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar