ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ஜொலிக்குது யாகசாலை மண்டபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2016 11:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கபட்டுள்ள யாகசாலை மண்டபம் பிரமாண்டமாக அமைக்கபட்டு தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. ஜன., 20ல் ஆண்டாள் கோயில் திருப்பாவை விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக 16 முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இதை தொடர்ந்து ஆடிப்பூர பந்தலில் யாகசாலை மண்டபம் தங்கநிறத்தில் ஜொலிக்கும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது. இதை பக்தர்கள் பலர் அலைபேசியில் படம், செல்பி எடுக்கின்றனர். இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளும் அமைக்கபட்டுள்ளன. இதை மின்சார மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார், கோட்ட பொறியாளர் பழனிவேலு கொண்ட அதிகாரிகள் கோயில் மற்றும் கோயிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் ஆய்வு செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராஜாராமன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போலீஸ், தீயணைப்பு துறை, அறநிலையம் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தங்களது துறை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.