Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி தைப்பூசக் காவடி ஜன.17ல் புறப்பாடு திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனே மிகச் சிறந்த ரசிகன்; சுகிசிவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

திருப்பூர் : ""இயற்கையை படைத்த, இறைவனே மிகச்சிறந்த ரசிகன் என, சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார். திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் பொன் விழா ஆண்டு இசை அமுதம் நிகழ்ச்சி, வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று துவங்கியது; சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வீரராகவன் துவக்கி வைத்தார். மாலை, 4:30 மணிக்கு, பொள்ளாச்சி முத்து வீராசாமி, சிவக்குமார் குழுவினரின் மங்கள இசையுடன், விழா துவங்கியது. பின், அம்பிகா சுரேஷ் மற்றும் ராயபுரம் கிருஷ்ணர் கோவில் குழுவினரின் விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது. பொன் விழா உரையாக, "ரசனை என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது: பிறவியிலேயே எல்லா உயிர்களுக்கும், உணவுச்சுவை மீதான ரசனை உண்டு. தாயிடம் பால் அருந்தும் குழந்தை கூட, "உச்சு கொட்டி ரசிக்கும். இந்த ரசனை, உணவோடு மட்டும் நின்று விடக்கூடாது.

நான் என்கிற உள்ளுணர்வு அனைவருக்கும் உண்டு. இந்த உணர்வு மேலெழும்போது, அறிவு, மனம் என இரண்டாக பிரிகிறது. அறிவுப்பூர்வமாக சிந் திக்கும்போது, ரசனை போய்விடுகிறது. எதையும் ரசிக்க வேண்டுமெனில், மனமே முக்கியம். ஆயக்கலைகள், 64ஐயும் ரசிக்கலாம். விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. விமர்சகர்கள், அறிவால் பார்க்கின்றனர்; ரசிகன், மனதால் பார்க்கிறான். இந்த மனம், அலைகள்போல், எழுச்சி உடையது. அதனாலேயே, ஒருவருக்கு ஒருவர் ரசனை மாறுபடுகிறது. நாம் இதை ரசிக்கிறோம் என்பதற்காக, அதுவே சிறந்த ரசனை என எண்ணுவதோ, நாம் ரசிப்பதையே மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என, எண்ணுவதோ சரியில்லை. கடவுள் வழிபாட்டிலும் கூட, ரசனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங் களுக்கு பிடித்த கடவுளையே வழிபடுகின்றனர்.

சின்னஞ்சிறிய வண் ணத்துப்பூச்சிக்குள் எத்தனையோ நிறங்களை வைத்துள்ளான், இறை வன். யாரும் பார்க்காத ஆழ்கடலிலும், அழகிய மீன்களை படைத்துள்ளன். இந்த இயற்கையை படைத்த இறைவனே, மிகச்சிறந்த ரசிகன். ஸ்ரீரங்கம் பெருமாளை போற்றும், 108 அட்சர நாமத்தில், ஒருநாமம், அவர் காவிரி கரையில் எழும் காற்றை ரசிக்கிறார், என்கிறது. இசையை ரசிக்க வேண்டும்; வேதங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, சிவபெருமான், கந்தர் வர்களை தனது காதில் குண்டலமாக அணிந்துள்ளார். பாராட்டுக்கு ஏங்காதவர்கள் யாருமில்லை. பிறரை பாராட்டுவதால், அவர்களுக்கு, தலைக்கனம் கூடி விடும் என நினைக்கக் கூடாது; அதற்காக, மிகையான பாராட்டுதலும் கூடாது. பிறரை ரசிக்க வைக்கும் அதேநேரம், ரசிகர்கள் தவறு செய்யும் பட்சத்தில், திருத்தும் பொறுப்பு, கலைஞனையே சேரும். சிலர், புரியாதவற்றையும் பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்; அது, தவறு. இவ்வாறு, சுகிசிவம் பேசினார். இன்று மாலை, 4:30 மணிக்கு கோவை அபர்ணா கோபால் பாட்டு; 6:30க்கு திருச்சூர் சகோதரர்களின் பாட்டு நடக்கிறது; இதில், ராம்மோகன், ராம்குமார் மோகன் பாட்டு; ராஜிவ் முகுந்தன் வயலின்; மோகன் மிருதங்கம்; வெங்கட சுப்ரமணியம் கடம் வாசிக்கின்றனர். 18ம் தேதி வரை இசை அமுதம் நிகழ்ச்சி நடக்கிறது; அனுமதி இலவசம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar