Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதை கோவில்களில் பொங்கல் ... அவிநாசி வட்டம், மொண்டிபாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமால் கோவில் திருவிழா (ஜன.,16)ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
ஆல்கொண்டமால் கோவில் திருவிழா (ஜன.,16)ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
02:01

உடுமலை: கால்நடைகளின் காவல் தெய்வம் ஆல்கொண்டமால் கோவில் திருவிழா,
(ஜன.,16) கோலாகலமாக துவங்குகிறது.

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் எழுந்தருளியுள்ள, ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழா, இன்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் துவங்குகிறது; ஜன., 18ம் தேதி நிறைவடைகிறது.

கால்நடைகளுக்கு நன்றிக்கடன்: கடவுளர்களுக்கு நந்தி, குதிரை, எலி, சிங்கம் போன்றவை வாகனங்களாக அமைக்கப்பட்டிருக்கும். ஆல்கொண்டமால் கோவிலில், மிக பிரமாண்டமாக பசுக்கள், காளை, ஆடுகள் என சிலைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும் இக்கோவில் வழிபாட்டு முறை எடுத்துக்காட்டுகிறது.

பூ வைத்து அருள்வாக்கு: இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் அனைத்து விேஷசங்களுக்கும் ஆல்கொண்டமாலிடம் வந்து வெள்ளை, சிவப்பு வண்ண பூக்களை வைத்து அனுமதி கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால் மட்டுமே அந்த பணியை துவக்குகின்றனர்.

கோவிலும், உற்சவரும்: ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்த கண்ணபிரான், பசுக்களை காக்கும் கடவுளாக திகழ்கிறார். விவசாயத்தை செழித்தோங்க செய்து வரும் ஆயர்பாடி கண்ணனுக்கு இங்கு கோவில் அமைத்துள்ளனர். தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், பித்தளை ஆகியவற்றை சரி சமமாக கொண்டு பஞ்சலோகத்தில் அழகான கலை அம்சத்துடன் பசுவுடன், புல்லாங்குழல் ஊதும் கோபாலகிருஷ்ணனை வடிவமைத்துள்ளனர்.

கொடி மரம்:
சுமார், 15 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கருட வாகனத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் சிலை உள்ளது. மேலும் திருமாலின் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கொடிமரத்தில் விஷ்ணு தீபம் ஏற்படுகிறது.

சன்னதிகள்: உலகின் முழு முதற்கடவுளாக திகழும் விநாயகர் சன்னதி, கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றிலும் தன்னாசி சித்தர், ஆஞ்சநேயர், மகாமுனி ஆகியோருக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar