பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் அஞ்சல் மொண்டிபாளையத்தில் மேலத்திருப்பதி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருத்தேர் திருவிழா (16.1.2016) சனிக்கிழமை முதல் தை மாதம் 12-ஆம் நாள் (26.1.2016) செவ்வாய்க்கிழமை முடிய நிகழ்ச்சி நிரல்படி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
மன்மத வருஷம் தை 2-ஆம் நாள்: (16.1.2016) சனிக்கிழமை
இரவு: 8.00 மணி- திருமுளை, நகரசோதனை வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம்
மன்மத வருஷம் தை 3-ஆம் நாள்: (17.1.2016) ஞாயிற்றுக்கிழமை
காலை: 6.00 மணி- பெருமாளுக்கு திருக்காப்பு கட்டுதல்
7.00 மணி- கருடாழ்வார் திருமஞ்சனம்
8.00 மணி- கொடியேற்றம், மகா தீபாராதனை
இரவு: 7.00 மணி- திக்பாலகர்கள் காப்பு கட்டுதல்
8.00 மணி- அன்ன வாகனத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 4- ஆம் நாள்: (18.1.2016) திங்கட்கிழமை
காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- சிம்ம வாகனத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 5-ஆம் நாள்: (19.1. 2016) செவ்வாய்கிழமை
காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- அனுமந்த வாகனத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 6-ஆம் நாள்: (20.1.2016) புதன்கிழமை
காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 7-ஆம் நாள்: (21.1.2016) வியாழக்கிழமை
காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
10.00 மணி- அம்மன் அழைத்தல்
10.30 மணி- திருக்கல்யாண உற்சவம்
இரவு: 9.00 மணி- புஷ்பக விமானத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 8-ஆம் நாள்: (22.1.2016) வெள்ளிக்கிழமை
காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- யானை வாகனத்தில் திருவீதி புறப்பாடு
மன்மத வருஷம் தை 9-ஆம் நாள்: (23.1.2016) சனிக்கிழமை
காலை: 5.00-6.00 மணி-புனர்பூச நட்சத்திரமும் விருச்சிக லக்கினமும் கூடிய சுபயோக வேளையில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதல்
முற்பகல்: 11.00 மணி- திருத்தேர் வடம் பிடித்தல்
மன்மத வருஷம் தை 10-ஆம் நாள்: (24.1.2016) ஞாயிற்றுக்கிழமை
காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- பரிவேட்டை குதிரை வாகனத்தில் திருவீதிபுறப்பாடு
மன்மத வருஷம் தை 11-ஆம் நாள்: (25.1.2016) திங்கட்கிழமை
காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- சேஷ வாகனத்தில் திருவீதிபுறப்பாடு தெப்பத்திருவிழா
மன்மத வருஷம் தை 12-ஆம் நாள்: (26.1.2016) செவ்வாய்கிழமை
காலை: 8.00 மணி- மகா திருமஞ்சனம், மகாதரிசனம்
பகல்: 12.00 மணி- கொடி இறக்குதல், காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனை விழாப் பூர்த்தி
தொடர்புக்கு:
து. இராமமூர்த்தி
பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர்
மு. சந்திரமோகன் பி.எஸ்.சி., பி.எல்.,
செயல் அலுவலர்
பரம்பரை அறங்காவலர்கள்:
ஏ.டி. ஜெகநாதன், ஏ.டி.தேவராஜன் பி.இ.எம்டெக், து. வெங்கடேசன், கொ.வெ. பாலசுந்தரம் எம்.ஏ., து. தேவராஜன், எம். தேவராஜன், வெ. பாபு, எம். ராமகிருஷ்ணன், எம். வெங்கடேசன், ஸ்ரீராம் இராஜன்.