Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் திருவிழா ... குமார சுவாமி கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கிராமத்தில் முயல் விடும் வினோத திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
12:01

திருவண்ணாமலை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருகே, முயல் விடும் வினோத திருவிழா நடந்தது. முயல் யாரிடமும் சிக்காமல் ஓடி விட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, நல்லூர் கிராமத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் நரி விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த, மூன்று ஆண்டுகளாக குள்ள நரி கிடைக்காததால், அதை முயல் விடும் விழாவாக மாற்றினர். விழாவில், ஓடும் முயலை யார் பிடிக்கிறார்களோ, அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்தால், குடும்பம் சுபிட்சமாக, நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் முயல் விடும் விழா நடந்தது. முயல் கழுத்தில் மாலை அணிவித்து, டிராக்டரில் ஊர்வலமாக திரவுபதி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு நோய் வரக்கூடாது என்பதற்காக, முயலை குழந்தைகளின் தலையில் வைத்து, ஆசி பெறும் நிகழ்ச்சி நடந்தது. பின், கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை பூசாரி, இரண்டாக வெட்டினார். வாழை மரத்தை போட்டி போட்டு கிராம மக்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர். இதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பின் கோவிலில் இருந்து முயலை ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஓட விட்டனர். அதை பிடிக்க மக்கள் ஓடினர். ஆனால் முயல் யார் கையிலும் சிக்காமல், கரும்பு தோட்டத்தில் புகுந்து சென்று விட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். விழாவில், பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ்வரி ராஜேந்திரன், திரவுபதி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கருணாகர ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar