Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத் தேரோட்டம் கோலாகலம்! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சாமிர்தம் தயாரிக்க பழநியில் டன் கணக்கில் மலை வாழைப்பழம் குவிப்பு!
எழுத்தின் அளவு:
பஞ்சாமிர்தம் தயாரிக்க பழநியில் டன் கணக்கில் மலை வாழைப்பழம் குவிப்பு!

பதிவு செய்த நாள்

22 ஜன
2016
06:01

பழநி: பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற பழநி தைசப்பூச விழாற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலைவாழைப் பழங்கள் 100 டன் வரை வந்துள்ளன. பழம் வரத்துள்ளதால் விலை குறைந்துள்ளது.  தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரைபக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழை பழங்களை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலூர், சிறுமலை, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழை பழங்கள் 100 டன் வரை வந்துள்ளன. வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஒரு பழம் ரூ.6முதல் ரூ.10 வரை விற்றது தற்போது ரூ.4 முதல் ரூ.8 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.

விலை குறைவு காரணமாக இவ்வாண்டு 150 டன் வரை விற்பனை ஆகும் என வியாபாரிகள் எதிர்பார்க் கின்றனர்.  வியாபாரிகள் யுவராஜ், பொன்னுச்சாமி கூறுகையில், மற்ற பழங்களில் தயார் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை விட மலைவாழைப்பழத்தில் செய்தால் ருசி அலாதியாக இருக்கும் பழநி வரும் பக்தர்களுக்காக சிறுமலை, பாச்சலார், குடகு உள்ளிட்ட பகுதியிலிருந்து பழங்கள் வந்துள்ளன. கடந்தாண்டு வாழைப்பழத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டதால் 70 டன் தான் வந்தது. இவ்வாண்டு வரத்து அதிகரித்து விலையும் குறைந்துள்ளதால் பஞ்சாமிர்தம் தயாரிக்க பக்தர்கள் வேறுபழங்களை நடவேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar