Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரர் கோவில் 3ம்ஆண்டுஆராதனை! காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா காட்டுபாவா பள்ளிவாசலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர்
எழுத்தின் அளவு:
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர்

பதிவு செய்த நாள்

27 ஜன
2016
11:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஊர்க்காவல் படை மற்றும் போலீசார் சார்பில், ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு சென்று வருகின்றனர். கோவையிலிருந்து வரும் பொள்ளாச்சி முக்கிய சாலையே பயன்படுத்தி வருகின்றனர். வெயிலுக்கு முன், காலையில் நடந்து செல்லும் பக்தர்கள், ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து பயணத்தை துவக்குகின்றனர். குடும்பம்... குடும்பமாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்ததும், மாலை நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரோட்டோரம் நடந்து செல்கின்றனர்.

இரவில் இவர்கள் நடந்து செல்லும் போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதததால், அவதிப்பட்டு வருகின்றனர். ரோட்டோரம் நடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வரும் போது கவனச்சிதறலால், பக்தர்கள் மீது மோதும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்; பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் சார்பில், ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி ஊஞ்சவேலாம்பட்டி அருகே நடந்தது. எஸ்.ஐ., பரமேஸ்வரன், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி ராஜசேகரன், துணைப்படைத்தளபதி ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், நடைபயணமாக வந்த பக்தர்களுக்கு அதை ஒட்டினர். நிலவேம்பு கஷாயம்: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு, கோலார்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் தமிழ்மணி தலைமை வகித்தார். கோலார்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கலைச்செல்வி, சித்தா மருத்துவர் கோகிலா தேவி முன்னிலை வகித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar