பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
வாலாஜாபாத்: தென்னேரி அகரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், பிரம்மோற்சவம் காலை
(ஜன.,29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி அகரம் கிராமத் தில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது.
(ஜன.,29) காலை 7:40 மணி அளவில், பிரம்மோற்சவக் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது. மாலை 5:00 மணி அளவில், சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் அலர்மேல் மங்கை தாயாருடன் வீதி உலா வந்தார்.இன்று, காலை 7:30 மணி அளவில், கருடசேவை உற்சவமும்; மாலை 5:00 மணி அளவில், அனுமந்த வாகனத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் அலர் மேல் மங்கை தாயாருடன் எழுந்தருள உள்ளார்.