பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன. பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி காளிபாளையம் அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிற ப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து, சி வபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிணத்துக்கடவு: சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே ÷ நரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சிவலோகநாத உற்சவ மூர்த்தி, நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், ÷ தவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற ÷ காவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
வால்பாறை : சனிப்பிரதோஷத்தையொட்டி, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, சந் தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.