பதிவு செய்த நாள்
08
பிப்
2016
03:02
சென்னை: சைதாப்பேட்டை, திருக்காரணி, சொர்ணாம்பிகை உடனாய காரணீஸ்வரர் கோயிலில் வருகிற 21ம் தேதி, காலை: 7.00 மணிக்கு +2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டில் பங்கேற்க மாணவ-மாணவியர், பள்ளி அடையாள அட்டையின் நகலுடன் 14.2.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் 7.00 மணிக்குள் காரணீஸ்வரர் கோயிலுக்கு வந்து டோக்கன் பெற்றவேண்டும். முன்பதிவு செய்யாதவர்கள் கலந்து கொள்ள முடியாது. முன்பதிவிற்கு கட்டணம் இல்லை என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விழாவில் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
விழா ஏற்பாடு:
அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, பி.9/ஏ, பார்சன் நகர், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-600 015.
தொடர்புக்கு: 044-24712173, 99443 09719, 99406 25308
குறிப்பு: கடந்தாண்டு தேர்வுக்காக நடந்த வழிபாட்டில் +2 வகுப்பில் 1170 மதிப்பெண்களுக்கு மேல் 10ம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ-மாணவியர், டோக்கன் நம்பர், மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் வந்து பரிசு பெற பதிவு செய்து கொள்ளவும்.