விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், ஆனந்தவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி விழுப் புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஆனந்தவரதராஜ பெருமாளுக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜருக்கு திருவோண திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.