திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் திருப்பணியை முன்னிட்டு நாளை பாலாலயம் நடைபெறுகிறது.பிள்ளையார்பட்டி கோயிலுக்கு கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருப்பணி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு நாளை பாலாலயம் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு அனுக்ஞை பூஜைகளுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது.தொடர்ந்து மறுநாள் காலையிலும் பூஜை நடைபெற்று பாலாயம் நிறைவு பெறும் ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர்கள் வி.ராமனாதன் செட்டியார், எம்.தண்ணீர்மலை செட்டியார் செய்கின்றனர்.