ஊட்டி: ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கம் சார்பில், பொக்காபுரம், மசினி அம்மன் கோவில்களில் அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மசினியம்மன் கோவிலில், வரும் 13, 14ம் தேதிகளில் காலை முதல் இரவு வரையும், பொக்காபுரம் கோவிலில் வரும், 15ம் தேதி காலை, 7:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கண்ணன், ராஜரத்தினம், விஜயகுமார், சுரேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.