ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, சேளூர் சாணார்பாளையத்தில் உள்ள திருப்பதி முனியப்பசுவாமி கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 13ம் தேதி இரவு முதல் காலை வரை, 190க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை, 9 மணிக்கு திருப்பதி முனியப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தன. கடந்த, 15ம் தேதி காலை மறு அபிஷேகமும், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, 100க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு வழிபாடு நடத்தினர்.