பூஜைவேளையில் கோயிலில் கண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும். பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும். இறைவன், உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக்குறிப்பாகமணியோசை அமைந்துள்ளது. புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது. இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம். மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் மணி ஒலிப்பது நன்மை தரும்.