நாகப்பட்டினம் தாய்மூகாம்பிகை கோவிலில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2016 12:02
நாகப்பட்டினம்: நாகையில் பழமையான தாய்மூகாம்பிகை கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,நேற்றிரவு நடந்த பூச்சொரிதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகையில் பிரசித்திப் பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசிமக பிரமோற்சவ நிகழ்ச்சி நேற்று காலை அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.மாலை அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள்,பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து, அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த சிறப்பு தீபாரதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவினையடுத்து நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.