பதிவு செய்த நாள்
20
பிப்
2016
02:02
மரக்காணம்: மரக்காணம், கரிப்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மரக்காணம் பேரூராட்சி, கரிப்பாளையம் சால்ட் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர், பாலமுருகன், பிரம்மலிங்கேஸ்வரர், அங்காளம்மன் ஆகியோருக்கு கும்மாபிஷேகம் விழா நடந்தது.
இதனையொட்டி கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணிக்குவிநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி,
பிரவேசபலி, மிருசங்கிரகணம், தீபாராதனை நடந்தது. 18ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி
ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, நவகிரகசாந்தி, முதல்காலயாக பூஜைகள்
நடந்தன. 19ம் தேதி காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜைகள், மகா அபிஷேகம், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகாதீபாரதனை நடந்தன. காலை 10:00 மணிக்கு அங்காளம்மன் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தன. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.