பதிவு செய்த நாள்
20
பிப்
2016
02:02
ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியில், மகா சக்தி மாரியம்மன், விநாயகர், வள்ளி,
தெய்வானையுடன் தனித்தனி கோவில், 55 அடி உயரத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும்
நவக்கிரக மூர்த்தி சுவாமி சிலைகள் என, மொத்தம், 1.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
அதிகாலை 5 மணியளவில், நான்காம் கால யாகபூஜை, பிம்பசுத்தி ஸ்பர்சாகுதி, நாடிசந்தானம், சன்னவதி மூல மந்திர ஹோம பூஜைகள் நடந்தது. காலை, 8 மணியளவில், ராஜகோபுர விமான கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவர் மகாசக்தி மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.