Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோத்தகிரி மாரியம்மன் கோவில் ... கரூர் சனி பிரதோஷ விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் ஆயிரம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
02:02

கரூர்: பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான ஆளவந்தீஸ்வரர்
கோவிலில், 180 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் என்பது சோழர்களால்
ஆட்சி செய்த இடம் என்பதற்கு இன்றும் சான்றாக விளங்கி வருகிறது. இப்பகுதியில், ஆயிரத்து, 500 ஆண்டுக்கு முன் ஆரணவள்ளி உடனமர் ஆளவந்தீஸ்வரர் கோவிலை கருங்கற்களால் கொண்டு சோழர்கள் கட்டினர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருக்கிறது. இருப்பினும், நாளடைவில் இக்கோவில் சுற்றுச்சுவர்கள் பெயர்ந்து விழுந்தும், பக்தர்கள் அதிகளவில் வராத நிலைக்கும் பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வேலைகளில் கடந்த ஓராண்டாகவே அதிகாரிகள் துணையுடன் ஈடுபட்டு வந்தனர். கோவில் புனரமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. அதன்பின் கடந்த, 16ம் தேதி காலை
விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிசேக விழா துவங்கியது. நாள்தோறும் பல்வேறு ஹோமங்கள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது. கோவிலில் அமைந்துள்ள விநாயகர், ஆளவந்தீஸ்வரர் கோபுரத்திற்கு நேற்று முன்தினம் காலை காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசங்களுடன் ஊர்வலமாக வந்த சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிசேகம் செய்து வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், ஆங்காங்கே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar