இயற்கையை யாராலும் அனுமானிக்க முடியாது. இவை இவை இப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பொருளிலும் கடவுள் நியதி தத்துவம் என்ற தன்மையை தீர்மானித்துப் படைத்திருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. ஆகவே, தேங்காய் உடைக்கும் போது அது அழுகலாகவோ அல்லது சிதறி உடைந்தோ போகுமானால் கவலைப்பட வேண்டியதில்லை. வேறு ஒரு தேங்காயைப் பயன்படுத்தலாம். எனினும், ஒரு குறிப்பிட்ட காரியத்தை நினைத்து தேங்காயை உடைக்கும் போது அழுகியிருந்தால், அப்போது அதை அபசகுனமாகக் கருதலாம். மற்ற சமயங்களில் இயற்கையான நிகழ்வு என்று புரிந்துகொண்டு மேலே காரியங்களைத் தொடரலாம்.