Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புலி வாகனத்தில் கோனியம்மன் திருவீதி ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 169வது உழவாரப்பணி! இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் நூதனம்.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பூஜை: வழிபாட்டில் வாழைப்பழம் சூறை!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் நூதனம்.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பூஜை: வழிபாட்டில் வாழைப்பழம் சூறை!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, வாழைப்பழம், கடலை, நெல் ஆகியவற்றை சூறை விட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டி கிராமம் கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் மாசிமாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் பல மாவட்டங்களின் நுாற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கும்.கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட் தடை உள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் பொதுமக்கள் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

வாழைப்பழம் சூறை:
ஜல்லிக்கட்டு நடத்த தடையால் நேற்று கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், 50 ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றாக நிறுத்தி சிறப்பு பூஜை செய்தனர். மாடுகளுக்கு பழங்கள் ஊட்டினர். தொடர்நது வாழைப்பழம், கடலை, நெல் உட்பட நவதானியங்களை சூறை விட்டு வழிபட்டனர். இதில் பூஜாரி வீரபத்திரன், நாட்டாண்மை சின்னைய்யா, பெரியதனம் பாலகுரு, மணியக்காரர் ஆச்சிமுத்து, முருகன் பங்கேற்றனர். நாட்டாண்மை சின்னையா கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக முன்னோர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினர். இந்தாண்டு நடத்தாததால், கிராமத்தில் உள்ளோர் அம்மை உட்பட பல தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இதனால் நாங்கள் கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்துள்ளோம். கடந்த 2 நாட்களில் நோய்கள் குறைந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்வோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar