பதிவு செய்த நாள்
19
ஆக
2011
05:08
சகல சாஸ்திரங்களும் வித்தைகளும் சிவபெருமானிடமிருந்து தோன்றியவை. அவற்றில் சில யோக சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், தந்திரம், ஆயுர் வேதம், இலக்கணம், தனுர் வேதம், கை ரேகை, விஞ்ஞானம். மேலும் 112 யோகாச்சார்யார்களுக்கு அவர் யோக வித்தைகள் கற்பித்திருக்கிறார். துஷ்டர்களை அழித்ததால், அவர் ருத்திரன், சிவனின் வாகனம் ரிஷபம். தர்ம சாஸ்திரங்களில் தர்மத்தின் பெயர் ரிஷபம். தர்ம, அர்த்த, காம, மோட்சங்கள் ரிஷபத்தின் நான்கு பாதங்களாகச் சொல்லப்படுகிறது. சிவபுராணத்தில் சர்வ, பவ, ருத்ர, உக்ர, பீம, பசுபதி, ஈசான, மகாதேவன் என்று அஷ்ட மூர்த்திகளாக சிவபெருமான் போற்றப்படுகிறார். சிவபெருமான் வெளிநாடுகளில் பல்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார். நேபாளம் - காட்மாண்டுவில் பசுபதி நாதனாக வழிபடுகிறார்கள். பாலி தீவில் புத்தரின் சகோதரராக அழைக்கப்படுகிறார். லாவோசில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு முன், சிவபெருமானை வழிபடுகிறார்கள். ஜப்பானில் ஆயின் எனும் நகரத்தில் சிவலிங்கத்துக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. திபெத்தில் ஈசனின் பழம் பெரும் ஆலயம் உள்ளது. மங்கோலியர்கள் சிவபெருமானை மிகவும் பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் கங்கை நீரை அமிர்தமாகக் கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் கலாம் நகரில் ஜடாசங்கரன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் அதிக அளவில் கிடைத்த சிவலிங்கங்கள், சங்க் ஏ அசபத் என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகின்றன. கம்போடியா நாட்டில் பல நகரங்கள் சிவ பெருமானின் நாமங்களுடன் அழைக்கப்படுகின்றன. ஜாவாவில் குஞ்ரகுஞ்ச் பகுதியில் சிவபெருமானின் ஆலயங்கள் உள்ளன.