சாதாரணமாகக் கோயில் கட்டும்போது அஸ்திவாரத்தில் ராமஜெயம் எழுதிய காகிதங்களை வைத்து கட்டுமானம் செய்வார்கள். இந்த சம்பிரதாயம், கொஞ்ச காலமாக நம்மூரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற இடங்களில் ராமஜெயம் எழுதிய காகிதங்களை கெட்டு போக வேண்டாம் என்பதற்காக, காசிக்குச் செல்லும் யாராவது ஒருவரிடம் கொடுத்து கங்கையில் போடச் சொல்லலாம். கிழித்துப் போடுவது எரிப்பது போன்ற அபசாரத்தைச் செய்யக் கூடாது!