பதிவு செய்த நாள்
27
பிப்
2016
11:02
தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்களில், பிரசாத கடைகள் உள்ளன.
இந்த பிரசாத கடைகளை தனியார் சிலர், அறநிலையத் துறையிடம், ஒரு லட்சம் முதல், ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் எடுத்து, கோவில் வளாகத்தில் நடத்தி வருகின்றனர்.
இக்கடைகளில் விற்கப்படும் பிரசாத பொருட்கள் தரம் குறைந்து உள்ளதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பிரசாத கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எதுவும், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதல்ல. கடைக்குள்ளேயே பொங்கல் மற்றும் புளியோதரை தயாரிக்கப் படுகிறது. லட்டு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாத பொருட்கள், வெளியிலிருந்து வாங்கப்படுகின்றன. அதன் தயாரிப்பு எந்த அளவு நேர்த்தியாக இருக்கும் என்பது சந்தேகமே. மேலும், பிரசாதம் தரம் இன்றியும், அளவு குறைந்தும் வழங்கப்படுகிறது. தொன்னைகளுக்கு பதிலாக, தற்போது பிளாஸ்டிக் டப்பாக்களில் கொடுக்கப்படுகிறது; பொருட்களுக்கு ரசீது கொடுப்பதில்லை. இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.