பதிவு செய்த நாள்
27
பிப்
2016
12:02
ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், கோவில் வளாகத்தில், மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு வருகிறது. பகடை துகில், கிருஷ்ணன் துாது, குறவஞ்சி உள்ளிட்ட கூத்துகள், தினமும் இரவு, 10:00 மணிக்கு நடந்தன. நேற்று பகல், 12:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நடந்தது. இதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதை முன்னிட்டு, பெண் பக்தர்கள், அர்ச்சுனன் தபசு மரத்தடியில் தவம் மேற்கொண்டனர். வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, துரியோதணன் படுகளமும், அன்று மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன. 29ம் தேதி காலை தருமர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.