திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.
இக்கோயிலில் பிப்., 28ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. சிவன், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து, பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜைகள் நடந்தன. இரவு 12.00 மணிக்கு முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளிய உற்சவர் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். மார்ச் 9 இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூ சப்பரம் கொண்டுவரப்பட்டு, சிவாச்சார்யார்களால் அங்காள பரமேஸ்வரிக்கு பூஜைகள் முடிந்து பூ சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும்.