Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விடிய விடிய ஒலித்த ஓம் நமசிவாய: ... சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்! சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை!
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
11:03

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா, கடந்த 7ம் தேதி, மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக நேற்று மயானக் கொள்ளை நடந்தது. காலை 10:40 மணிக்கு, கோவிலில் இருந்து, சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன், மயானம் புறப்பாடு நடந்தது.  சிம்ம வாகனத்தில் அம்மன் வந்தபோது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இறைத்தனர். காலை 11:00 மணிக்கு, மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளியதும், அங்கு பக்தர்கள் குவித்து வைத்திருந்த உணவை, கோவில் பூசாரிகள் கொள்ளை விட்டனர்.  அப்போது, அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.  பக்தர்கள் சிலர் உயிர் கோழிகளை வாயில் கடித்து பலி கொடுத்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் நாகபூஷிணி, பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சேகர் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.  சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்களை இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar