பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு, சுப்ரபாதம், மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். மதியம் 1:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை, பிற்பகல் 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு, சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.