கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ ஹோமத்துடன் துவங்கியது.108 கலச பூஜை, நான்கு கால யாகசாலபூஜை, சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் 501 விளக்குகளால் லிங்க வடிவில் ஜோதி லிங்கத்தை சிவனடியார்கள் செய்திருந்தனர். திருக்கல்யாண பேரூரார் கலைக்கலஞ்சியம் சார்பில் சிவார்ப்பணம், பரதநாட்டியம், யோகா, தேவாரம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேவஸ்தான கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரகுருக்கள், ஏஎல் . ஏஆர் அறக்கட்டளையினர் பங்கேற்றனர்.