நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளான நேற்று கஜபூஜை நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனையொட்டி கோ (பசு) பூஜை, அஷ்வமேத (குதிரை) பூஜை, கஜ (யானை) பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானையை வைத்து கஜ பூஜை நடத்திய பின் புனித நீர் குடத்தை யானை மீது ஊர்வலமாக கொண்டு வந்து யானை மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வரும் 16ம் தேதி தெருவடைச்சான், 18ம் தேதி தேரோட்டமும், 19ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.