பதிவு செய்த நாள்
14
மார்
2016
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு, பழைய உற்சவர் சிலைக்கு பதிலாக, புது சிலையை, வீதிவுலாவுக்கு பயன்படுத்த அறநிலையத்துறை திட்டமிட்டிருந்தது. பக்தர்கள், உபயதாரர்கள் மத்தியில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பழைய உற்சவர் சிலையையே வீதிவுலாவுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின் தீபாராதனை முடிந்து, காலை, 8:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இரவு, 8:30 மணிக்கு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், அம்மன் ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் ராஜ வீதிகளில் சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.