பதிவு செய்த நாள்
14
மார்
2016
10:03
திருப்பதி: காளஹஸ்தியில்
நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 11ம் நாளான நேற்று இரவு,
பல்லக்கு சேவை நடந்தது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில்
உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், மார்ச் 2 முதல்
நடந்து வருகிறது. 11ம் நாளான நேற்று காலை, சோமஸ்கந்தமூர்த்தி,
ஞானபிரசுனாம்பிகைக்கு பால், தயிர், மஞ்சள், சந்தன அபிஷேகம் நடந்தது. பின்,
பல்லக்கு உற்சவம் நடந்தது. தங்க பல்லக்கில் சோமஸ்கந்தமூர்த்தி,
ஞானபிரசுனாம்பிகையும் மாடவீதிகளில் வலம் வந்தனர். பிரம்மோற்சவம், இன்றுடன்
நிறைவடைகிறது.