வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 11:03
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலின், 64ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதன÷ காபால் முன்னிலையில் காலை, 9:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. நேற்று மாலை, 6:00 மணிக்கு சிவாலயத்தில் நடந்த பிரதோஷ பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நாளை மாலை, 6:00 மணிக்கு காமாட்சி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்துவந்து அபிேஷக பூஜை செய்யப்படு கிறது. வரும் 23ம் தேதி மாலை, 4:00 மணிக்கு முருகன் வள்ளிதெய்வானைக்கு திருக்கல்யாணமும், வரும் 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் செய்து வருகின்றனர்.