Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான ... சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசேலம் நகரை நோக்கி சென்றப் போது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று  காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

தொடர்ந்து காலை ஏழு மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பங்கு பாதிரியார் சூசைமாணிக்கம்  தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி தேவாலய வளாகத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர். தொடர்ந்து பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும், செபமாலையும் நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதே போல் நாகை,லுõர்துமாதா தேவாலயம், மயிலாடுதுறை,சோழவித்தியாபுரம், கருங்கண்ணி, மேமாத்துர்  உட்பட மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில்  பங்கு பாதிரியார்கள் தலைமையில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar