பதிவு செய்த நாள்
21
மார்
2016
12:03
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசேலம் நகரை நோக்கி சென்றப் போது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.
தொடர்ந்து காலை ஏழு மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பங்கு பாதிரியார் சூசைமாணிக்கம் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி தேவாலய வளாகத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர். தொடர்ந்து பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும், செபமாலையும் நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதே போல் நாகை,லுõர்துமாதா தேவாலயம், மயிலாடுதுறை,சோழவித்தியாபுரம், கருங்கண்ணி, மேமாத்துர் உட்பட மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்கு பாதிரியார்கள் தலைமையில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.