Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: ... பெரிய மாரியம்மன் கோவில் விழா: புனித நீர் ஊற்றி வழிபாடு! பெரிய மாரியம்மன் கோவில் விழா: புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்
எழுத்தின் அளவு:
சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியை, அழகாபுரத்தில் உள்ள தங்குமிடத்துக்கு மாற்றம் செய்ய, தேர்தல் விதி அமலை காரணம் காட்டி அதிகாரிகள் தயங்குவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காசநோயின் தாக்கம் அதிகரித்ததால், அதை வனச் சூழலில் பராமரிக்க நாமக்கல் கால்நடை பல்கலைக்கழக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையேற்று, கோவில் நிர்வாகம் அழகாபுரத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், யானை, அதன் பாகன் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தங்குமிடத்தை வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் ஆய்வு மேற் கொண்டு, யானையை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி, யானை அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதோடு, தண்ணீர் தொட்டியும் ஏற்படுத்தப்பட்டது. யானையை அங்கு கொண்டு செல்வதில் மட்டும், கோவில் நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஈகோவால், தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானையை கோவிலுக்கு அழைத்து வரவும், வாக்கிங் அழைத்துச் செல்லவும் கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், அதற்கான கொட்டகையிலேயே யானை நிறுத்தப்பட்டு உள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானையை அழகாபுரத்துக்கு கொண்டு செல்வது குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில், யானை ராஜேஸ்வரியை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், யானை ராஜேஸ்வரியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே யானை இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar