Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: ... பெரிய மாரியம்மன் கோவில் விழா: புனித நீர் ஊற்றி வழிபாடு! பெரிய மாரியம்மன் கோவில் விழா: புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்
எழுத்தின் அளவு:
சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியை, அழகாபுரத்தில் உள்ள தங்குமிடத்துக்கு மாற்றம் செய்ய, தேர்தல் விதி அமலை காரணம் காட்டி அதிகாரிகள் தயங்குவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காசநோயின் தாக்கம் அதிகரித்ததால், அதை வனச் சூழலில் பராமரிக்க நாமக்கல் கால்நடை பல்கலைக்கழக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையேற்று, கோவில் நிர்வாகம் அழகாபுரத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், யானை, அதன் பாகன் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தங்குமிடத்தை வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் ஆய்வு மேற் கொண்டு, யானையை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி, யானை அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதோடு, தண்ணீர் தொட்டியும் ஏற்படுத்தப்பட்டது. யானையை அங்கு கொண்டு செல்வதில் மட்டும், கோவில் நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஈகோவால், தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானையை கோவிலுக்கு அழைத்து வரவும், வாக்கிங் அழைத்துச் செல்லவும் கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், அதற்கான கொட்டகையிலேயே யானை நிறுத்தப்பட்டு உள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானையை அழகாபுரத்துக்கு கொண்டு செல்வது குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில், யானை ராஜேஸ்வரியை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், யானை ராஜேஸ்வரியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே யானை இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar