பதிவு செய்த நாள்
24
மார்
2016
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி டி.கோட்டாம் பட்டி. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஆண்டுவிழா, நேற்று நடந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில் அனுக்ஞை, இறை அனுமதி பெறுதல், திருமஞ்சன சேவை மற்றும் 27 வகை அபிஷேகம் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு மேல், திருப்பள்ளி எழுச்சி, புண்யாவாசனம், காயத்திரி ேஹாமம், பஞ்ச சுத்த ேஹாமம், சுதர்சன ேஹாமம், சாற்று மறை, மாலை 4:30க்கு, திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை நடந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.